இலங்கையில் தமிழர்களின் இருப்புக்கான சர்வதேச தலையீடு குறித்து புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை..!
இலங்கையில் தமிழர்களின் இருப்புக்கு சர்வதேச தலையீடு மிகவும் அவசியம் என மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவீரர் தினத்தையொட்டி பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இலண்டனில் (London) விசேட நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் பங்கேற்று உயிர்நீத்த தமது உறவுகளை உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்ததுடன், அவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலியும் செலுத்தினர்.
மேற்கத்திய நாடுகள் அவதானம்
இதில் இலண்டனில் நடைபெற்ற நிகழ்வில் திரண்ட தமிழர்கள், இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போர் தொடர்பில், நீதியான விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்தியதுடன், தமிழ் மக்களுக்கான சர்வதேச நீதி நிலைநாட்டப்படுவதன் தேவையையும் வலியுறுத்தினர்.
இங்கையில் தமிழ் மக்களின் இருப்பை தீர்மானிக்க சர்வதேச தலையீடு மிகவும் அவசியம் என்றும், சம காலத்தில் ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மனித உரிமைகளை நேசிக்கும் மேற்கத்திய நாடுகள் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் புலம்பெயர் தமிழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
