அவுஸ்திரேலியாவில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் விடுதலையான தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்
அவுஸ்திரேலியாவில் குடிவரவு தடுப்பு முகாம்களில்12 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளரான ராஜன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Leukaemia- புற்றுநோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த ராஜனை, முகாமிலிருந்து விடுதலை செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்த பின்னணியில், அவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மெல்பன் குடிவரவு இடைத்தங்கல் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு community detention சமூகத்தடுப்பில் வாழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ராஜன் தெரிவித்ததாக, அகதிகள் செயற்பாட்டாளர் சாரதா ராமநாதன் தெரிவித்துள்ளார்.
சமூகத்தடுப்பில் வாழ வேண்டுமென்பதால் ராஜனுக்கென வீடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சாரதா ராமநாதன் தெரிவித்துள்ளார்.
ராஜன் என அழைக்கப்படும் சிவகுரு நவநீதராசா, கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையிலிருந்து வந்து அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்த நிலையில், அவருக்கு 2010ம் ஆண்டு அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட போதும் ASIO பிரிவினரின் எதிர்மறை அறிக்கையையடுத்து அவர் குடிவரவு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டார்.
கடந்த 2016ம் ஆண்டு ASIO பிரிவினரின் எதிர்மறை அறிக்கை மீளப்பெறப்பட்டு, ராஜன் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானவர் கிடையாது என தெரிவிக்கப்பட்டபோதும், அப்போது கொண்டுவரப்பட்ட குடிவரவுச்சட்ட மாற்றத்தின்படி அவர் வேறொரு புகலிடக்கோரிக்கை விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில்,12 ஆண்டுகளாக கிறிஸ்மஸ் தீவு, விலவூட், மெல்பன் குடிவரவு இடைத்தங்கல் முகாம் என பல தடுப்பு முகாம்களில் வாழ்ந்து வந்த ராஜனுக்கு 2018ம் ஆண்டு புற்றுநோய் தாக்கமிருப்பது கண்டறிப்பட்டதையடுத்து, இவரை விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுவடைந்ததுடன் பேரணிகளும், கையெழுத்து வேட்டைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த பின்னணியில் மெல்பன் குடிவரவு இடைத்தங்கல் முகாமிலிருந்து இன்றைய தினம் விடுதலையாகி சமூகத்தடுப்பில் வாழ ராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam