ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு உதவ பேச்சு நடத்தப்படும்:ராஜித
ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு உதவுவது சம்பந்தமாக கட்சி என்ற வகையில் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அக்கிராசன உரையின் பின்னர் நாடாளுமன்றத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே ராஜித இதனை கூறியுள்ளார்.
நான் அன்று முதல் இருந்து வரும் கொள்கையில் ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள கொள்கை விளக்க உரையில் இருக்கின்றது. இந்த கொள்கை காரணமாக அந்த காலத்தில் துப்பாக்கி சூடுகளை எதிர்நோக்க நேரிட்டது.
ஜனாதிபதியின் உரையில் அடங்கியுள்ள வேலைத்திட்டங்களை செய்ய முடிந்தால் மிகவும் நல்ல எனவும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.