தலிபான்கள் விடுத்துள்ள அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் தலிபான் எதிர்ப்புப் படைகளின் இறுதிக் கோட்டையான பஞ்ச்ஷீர் மாகாணம் தமது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக தலிபான்கள் இன்று அறிவித்துள்ளனர்.
இந்த தகவலை தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், "எதிரி கூலிப்படையினரின் கடைசி கோட்டையான பஞ்ச்ஷீர் மாகாணம் முழுமையாக கைப்பற்றப்பட்டது" என ஒரு அறிக்கையில் தெரிவித்து உறுதிப்படுத்தியுள்ளார்.
சில எதிர்ப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டதாகவும் ஏனையவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் முஜாஹித் அறிக்கையில் தெரிவித்துள்ளதுடன், தங்களை ஒடுக்க மாட்டோம் என்று தலிபான்கள் பஞ்ச்ஷிர் மக்களுக்கு உறுதியும் அளித்துள்ளதாக கூறினார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,
