ஆப்கானிஸ்தானில் முகச்சவரம் செய்யத்தடை விதித்த தலிபான்கள் - செய்திகளின் தொகுப்பு
சிகை திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச்சவரம் செய்யக்கூடாது என்று ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடிதிருத்தும் கலைஞர்களுக்கு தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
முகச்சவரம் செய்வது இஸ்லாமியச் சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் தலிபான் தெரிவித்துள்ளது.
இந்தத் தடையை மீறுகிறவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்றும் தலிபான் அரசின் மத காவல்துறை தெரிவித்துள்ளது.
இதே மாதிரியான உத்தரவுகள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாகத் தலைநகர் காபூலில் உள்ள முடிதிருத்தும் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறிய பின்னர் ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது உலக செய்திகளின் தொகுப்பு,