இரண்டு எல்லைக் கடவைகளை திறக்க சிரியா அரசாங்கம் ஒப்புதல்: ஐ.நா. தகவல் : செய்திகளின் தொகுப்பு
கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பேரழிவிற்குள்ளான சிரியாவிற்கு உதவிகளை வழங்குவதற்காக மேலும் இரண்டு எல்லைக் கடவைகளை திறக்க சிரியா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
தாங்கள் இப்போது ஒரே ஒரு கடவை மட்டுமே பயன்படுத்துகின்ற நிலையில், இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பல சிரியர்கள் தங்கள் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு உதவி இல்லாததால் கோபமடைந்துள்ளனர்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,