வவுனியாவில் வாள்வெட்டு தாக்குதல்! ஒருவர் படுகாயம்
வவுனியா - சோயாவீதிக்கு அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
தாண்டிக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர்நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை சோயாவீதிக்கு அண்மையில் வழிமறித்த இருவர் அதன் சாரதிமீது வாளால் தாக்கிவிட்டு ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த சாரதி அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.