யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்
தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது அடையாளம் தெரியாத மர்மநபர்களால் வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது.
இன்று அதிகாலை 3.45 மணியளவில் யாழ்ப்பாணம் கச்சேரி எரிபொருள் நிலையத்திற்கருகில் காத்திருந்தபோது பின்னால் வந்திருந்த இரு நபர்களால் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கானவரின் சந்தேகம்
உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்ட வேண்டும் என்பது
தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் செயற்படாமை
தொடர்பிலும் தான் அண்மையில் கருத்து தெரிவித்த நிலையில் இது திட்டமிட்டு
இடம்பெற்ற தாக்குதலாக இருக்கலாமென்று தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின்
ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் சந்தேகம் வெளியிட்டார்.