யாழில் இரவில் நடந்த வாள்வெட்டு தாக்குதல்! - இருவர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம் - இணுவில், காரைக்காலில் வன்முறைக் கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதில் குடும்பத் தலைவர் ஒருவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்துள்ளனர்.
மகனைத் தேடி வந்த வன்முறைக் கும்பல், அவர் வீட்டில் இல்லாததை அடுத்து அவரது தந்தையையும், தாயையும் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று இரவு நடந்துள்ளது. படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.