முன்னாள் இராஜாங்க அமைச்சர் தொடர்பில் போலி தகவல்! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
இணையப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் கீழ், முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் குறித்து, சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக கூறப்படும் மன்னாரைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சரைப் பற்றிய தவறான தகவல்களை உள்ளடக்கிய ஒலிப்பதிவுகளை பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் போன்ற சமூக ஊடக தளங்களில் பரப்பியதாக, குறித்த வர்த்தகர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்தநிலையில், குற்றம் சுமத்தப்பட்டவருக்கு 5000 ரூபாய் அபராதத்தையும் கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் திலின கமகே நேற்று (28.11.2024) விதித்துள்ளார்.
முதல் வழக்கு
இந்தநிலையில், தீர்ப்பின்போது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் தொடர்பில் சமூக ஊடகங்களில், பிரதிவாதி வெளியிட்ட அனைத்து அறிக்கைகளையும் உடனடியாக நீக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்ட இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam