மூத்த சட்டத்தரணி ஒருவரை பணி இடைநீக்கம் செய்த சட்டமா அதிபர் திணைக்களம்
மூத்த அரச சட்டத்தரணியான சவீந்திர விக்ரமவை சட்டமா அதிபர் திணைக்களம்(Attorney General's Department) பணி இடைநிறுத்தம் செய்துள்ளது.
விக்கிரம தனது மேலதிகாரிகளின் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இடைநிறுத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அதிகாரி, சட்டமா திணைக்களப் பிரிவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச்சேவைகள் ஆணைக்குழு
இந்தநிலையில் அவரின் இடைநிறுத்தத்துக்கு பொதுச்சேவைகள் ஆணைக்குழுவும், ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கிடையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களம் விசாரணைகளை நடத்த உள்ளது.
இதேவேளை சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பில,லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு மற்றும் கெசல்வத்தை பொலிஸில், சட்டத்தரணி விக்ரம இரண்டு முறைப்பாடுகளையும் செய்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 21 மணி நேரம் முன்
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam