முன்னாள் கிரிக்கெட் வீரரின் வீட்டில் கொள்ளையடித்த நபர் கைது
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் (Sachithra Senanayaka) வீட்டில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு (Colombo) தலங்கம பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், திருடப்பட்ட மடிக்கணனி, கையடக்க தொலைபேசிகள், 5 விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், நகைகள் மற்றும் 10,000 ரூபா பணம் ஆகியன சந்தேகநபரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
ஹோமாகம நீதிமன்றம்
மேலும், திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பல திருட்டு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபரை ஹோமாகம நீதிமன்றத்தில் பொலிஸார் முற்படுத்தவுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan