நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் குடியேறிய முன்னாள் வீராங்கனை
இலங்கையின் முன்னாள் நட்சத்திர தடகள வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார்.
கடந்த 2000ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் சுசந்திகா, இலங்கையின் சார்பில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.
திரும்பும் சாத்தியங்கள்
சுசந்திக்கா ஜயசிங்க தனது இரண்டு பிள்ளைகளுடன் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்னதாக அவர் அவுஸ்திரேலியா சென்றதாகவும் அவர் நாடு திரும்பும் சாத்தியங்கள் குறைவு எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிள்ளைகளின் கல்வியை கருத்திற்கொண்டு சுசந்திகா இவ்வாறு அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவில் குடியேறிய விவகாரம் தொடர்பில் சுசந்திக்கா அதிகாரபூர்வமான அறிவிப்புக்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 4 நாட்கள் முன்

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி News Lankasri

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்திடம் சேட்டை காட்டிய நபர்... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? Manithan
