உறை பனியில் உணவின்றி சிக்கி 5 நாட்களின் பின்னர் உயிர் பிழைத்த அதிசயம்
அமெரிக்காவின் வாஷிங்டனில் உறை பனியில் உணவின்றி சிக்கிய ஒருவர் உயிர் பிழைத்த அதிசயமொன்று நடந்துள்ளது.
68 வயதான லின்னல் மெக்ஃபார்லேண்ட் என்பவரின் கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்திற்குள் விழுந்துள்ளது.
இதன் காரணமாக அவருக்கு கை மற்றும் மூட்டு பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடலை உறைய செய்யும் பனியில் சிக்கிய அவர் உதவ யாருமின்றி தனது கார் சீட் பெல்டை கழட்டி கொண்டு, காரின் பின் பக்கத்தில் வந்து பத்திரமாக இருந்துள்ளார்.
எலும்பு முறிவின் காரணமாக அவர் இருந்த இடத்திலிருந்து நகர முடியாத நிலையில், காரில் இருந்த போர்வை மற்றும் துணிகளை கொண்டு தனது உடலை சூட்டுடன் வைத்துக் கொண்டுள்ளார்.
அத்துடன்,பனி மழையில் உருகிய சிறு சிறு பனித்துளிகளை தனக்கான உணவாக பருகி, அவர் உயிர் வாழ்ந்து உள்ளதாகவும்,சுமார் ஐந்து நாட்களுக்கு பிறகு விபத்தில் சிக்கியிருந்த அவரை மீட்புப் படையினர் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan