தடுப்பூசி தொடர்பில் சுகாதாரப்பணியாளர்களுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
கோவிட்-19 தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களை கணக்கெடுப்பு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
நாடு தழுவிய ரீதியில் இந்த கணக்கெடுப்பினை மேற்கொள்ளுமாறு அவர் சுகாதாரப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மேல் மாகாணத்தில் 30 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமென ஜனாதிபதி ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
நாட்டுக்கு போதியளவு தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்று வருவதனால், எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு முன்னதாக நாடு முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.