தனியார் வைத்தியசாலையில் மஹிந்தவுக்கு சத்திர சிகிச்சை - உறுதி செய்த சகோதரர்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவசர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரதமர் தலைமையில் கம்பளையில் நடைபெறவிருந்த வைபவம் ஒன்றில் அவரை பிரதிநிதித்துவம் செய்து கலந்து கொண்ட அமைச்சர் சமல் ராஜபக்ஷ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சத்திரசிகிச்சை காரணமாக பிரதமரால் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், அவரின் வாழ்த்துச் செய்தியை தெரிவித்ததாக அமைச்சர் கூறினார்.
எனினும் கொழும்பு நவலோக்க வைத்தியசாலையில் பிரதமருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வெளியான செய்தியை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
தானும் தனது தந்தை நவலோக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியை பார்க்க சென்றதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்திற்கு தடை? பிரித்தானியா அரசாங்கத்தின் அறிவிப்பு (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri