முன்னாள் இலங்கை கிரிக்கெட் டெஸ்ட் அணியின் தலைவருக்கு சத்திர சிகிச்சை
இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பின்னர், முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தலைவராக செயற்பட்ட பந்துல வர்ணபுரவுக்கு (Bandula Varnapura) சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சத்திர சிகிச்சை மூலம் அவரது காலில் பகுதி ஒன்று அகற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
திடீர் இருதய நோய் காரணமாக வர்ணபுர அண்மையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் அங்கு அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
68 வயதான பந்துல வர்ணபுர, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.