சுரேஷ் சாலே விடயத்தில் விசித்திரமான சட்டம் - நாடாளுமன்றில் அம்பலம்
பொலிஸ் அறிக்கை ஒன்றை எடுத்து வராத எந்த நபருக்கும், அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சாலேவை சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (06.03.2026) அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இதனால், 21 வயதான அவரது பிள்ளைக்கு கூட தனது தந்தையை சந்திக்க பொலிஸ் அறிக்கை ஒன்றை எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் விசித்திரமான சட்டம்.
சட்டத்தை கடுமையாக மீறும் செயல்
சந்தேகநபரல்லாத ஒரு நபரை இழுத்து வந்து அவரை சிறையில் வைத்துள்ளனர். இது தீவிரவாதத்தை ஒடுக்கும் சட்டத்தை கடுமையாக மீறிய செயலாகும். இன்று சட்டத்தரணி பேச வேண்டியிருந்தாலும், அவர்கள் முன்னிலையிலேயே பேச வேண்டும்.

48 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்திற்கு உத்தரவு ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும், ஆனால் அது சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த அவசரகாலத்தில் வர்த்தமானியில் எந்த உத்தரவுகளும் இல்லை.
இவற்றைப் பேசும்போது, அவரது குற்றச்சாட்டுகளைப் பேசுகிறீர்கள் என்று சபாநாயகர் அவர்கள் பேச அனுமதி வழங்குவதில்லை. சபாநாயகரே, நீங்கள் அந்த இருக்கையில் இன்னும் சிறிது காலம்தான் இருப்பீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 16 மணி நேரம் முன்
தன்னைப்போல் வெளியே அனுப்பப்பட்ட மீனா, நக்கலாக ரோஹினி சொன்ன விஷயம்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan