பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சற்றுமுன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவில் வைக்கப்பட்டுள்ள அவர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (20) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
வழக்கு விசாரணை
இதற்கமைய, சுரேஷ் சலே மீதான வழக்கு இன்று பிற்பகல் (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
You may like this..