நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு
இலங்கை பூராகவும் நடத்தப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு நடாத்தவுள்ளதாக ஆசிரியர் சேவா சங்கத்தின் தலைவர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
நாளையதினம் நாடுபூராகவும் பூரண ஹர்த்தாலை முன்னெடுப்பதற்கு நாட்டில் உள்ள அனைத்து அரச, அரச சார்பற்ற தனியார் தொழிற்சங்கங்கள் தயார் நிலையிலுள்ளன.
நாடு பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் தங்களது வாழ்வைக் கொண்டு நடத்த பாரிய கஷ்டப்படுகின்றனர்.
இந்நிலையில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தருவதை விடுத்து இந்த பிரச்சினையை மேலும் விரிவடையச்செய்து மக்களைத் துன்புறுத்தக்கூடிய நிலையைத் தோற்றுவித்துள்ளது.
எனவே
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாது' என குறிப்பிட்டுள்ளார்.
இவ்ஊடக சந்திப்பில் ஏற்பாடு குழு சார்பில் இணைந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து
கொண்டிருந்தனர்.



