குற்றச்சாட்டுக்கள் இல்லாத தலைவருக்கே ஆதரவு! ஈரோஸ் ஜனநாயக முன்னணி கருத்து
உள்ளூராட்சி சபைகளுக்கான தலைவர் தெரிவின்போது இலஞ்ச ஊழல்களில் சம்பந்தப்பட்ட அல்லது குற்றச்சாட்டுக்கள் உள்ள எந்தவொரு தலைவர் தெரிவிற்கும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆதரவு அளிக்காது என அக்கட்சியின் செயலாளர் ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் கௌரவிப்பு நிகழ்வு சத்தியப்பிரமானம் நிகழ்வும் அக்கட்சியின் செயலாளர் ஜீவன் ரஜேந்திரன் தலைமையில் நேற்று(01) கொட்டகலை கொமர்சல் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக ஈரோஸ் ஜனநாயக முன்னணி கடந்த 50 வருட காலமாக மலையகத்திலும் சரி வடகிழக்கிலும் குரல் கொடுத்து வந்தது.
ஆனால் முதன் முறையாக உள்ளுராட்சி சபைகளில் போட்டியிட்டு மூன்று உறுப்பினர்களை பெற்றுள்ளது. இந்த வெற்றியானது மக்களினது வெற்றியாகும் காரணம் ஆண்டாண்டு காலமாக மக்கள் உள்ளூராட்சி சபைகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
ஆனால் உள்ளூராட்சி மூலம் சேவைகள் தோட்ட பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலை மாற வேண்டும், மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எமது உள்ளூராட்சி சபைகளிலும் எமது உறுப்பினர்கள் செயப்படுவார்கள்.
மக்களுக்கு என்னென்ன சேவைகள் உள்ளூராட்சி சபைகள் மூலம் முன்னெடுக்க முடியுமோ அதனை முன்னெடுப்போம்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
