தலவாக்கலையில் வழங்கி வைக்கப்பட்ட கிருமிநாசினி மற்றும் களையெடுக்கும் இயந்திரங்கள்
கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட கிரேட்வெஸ்டன் பிரதேசத்தில் தேயிலை தேசத்தை காப்போம் என்ற தொனிப்பொருளில் கிருமிநாசினி தெளிக்கும் தாங்கிகள் மற்றும் களையகற்றும் இயந்திரம் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கிரேட்வெஸ்டன் பகுதியை சேர்ந்த மலைத்தோட்டம்,ஸ்கல்பா,லூசா,கல்கந்தைவத்தை ஆகிய நான்கு பிரிவுகளுக்குமான 90 இலட்சம் பெருமதியான பொருட்கள் பெரண்டீனா நிறுனத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பெரண்டீனா நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் ரஹீம், ஒருங்கிணைப்பாளர் சந்ரு , கிறேட்வெஸ்டன் தோட்ட முகாமையாளர் சரத் ரணசிங்க. கிரேட் வெஸ்டர்ன் தோட்ட நிர்வாக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.