இந்திய பெருங்கடலில் உருவான ஆக்ரோஷ சூறாவளி புயல்! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள்
இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்ப மண்டல சூறவாளி காற்று உருவாகி மொரிஷியஸ் தீவு நோக்கி நகர்ந்து வருவதாக சர்வதேச விண்வெளி மையம் கூறியுள்ளது.
இதனையடுத்து மொரிஷியசில் அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டுள்ளதுடன், மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த புயலின் கண் பகுதி ஆக்ரோஷமாக நகர்ந்து செல்லும் காட்சியை சர்வதேச விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பாக சீற்றத்துடன் காணப்படும் நிலையில் புயல் காரணமாக தென் ஆப்ரிக்கா, மலாவி, ஜாம்பியா, போட்ஸ்வானா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளும் புயலை எதிர்கொள்ள நேரிடும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த புயல் பயங்கரமான சூறாவளியாக தாக்கும் எனவும் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
