சந்திரகுமாரின் அதிரடியுடன் யாழ். மாநகர சபையை இறுதி செய்த சுமந்திரன்
தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட்ட தமிழ் தேசிய கட்சிகளுக்கு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்துள்ளநிலையில் வடக்கு - கிழக்கு பெரும்பான்மையான உள்ளூராட்சி சபைகளை அக்கட்சி கைப்பற்றியுள்ளது.
உள்ளூராட்சி அரசியல் அமைப்பின் அடுத்த கட்ட செயற்பாடுகளை ஆராய்வதற்காக அக்கட்சி நாளைய தினம் கூடவுள்ளது.
தேர்தல் விடயங்களை எந்தெந்த சபைகளில் எவ்வாறு செயல்படுவது? யார் யாரை முன்னிலைப்படுத்தி தவிசாளர் முதல்வரை தீர்மானிப்பது? போன்ற கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ரெலோ, புளோட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தமிழரசுக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், செல்வம் அடைக்கலநாதன் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
மேலும் யாழ் மாநகர சபையின் ஆட்சி நடவடிக்கை தொடர்பில் முன்னாள் எம்.பி எம்.ஏ சுமந்திரன் பல நகர்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பிலும், தமிழரசுக்கட்சியின் அத்தக்கட்ட அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 30 நிமிடங்கள் முன்
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri