தமிழர்களின் விடுதலை போராட்டத்தை குறைமதிப்புக்கு உட்படுத்திய கோட்டாபய!
இலங்கை ஜனாதிபதியின் அக்ராசன உரை தொடர்பிலான, ஒத்திவைக்கப்பட்ட விவாதத்துக்காக நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட நேரம் அதிகமானது என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் இதனை இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைப்பு விவாதத்தின்போது தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உரையில் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் பிரச்சினைகளுக்கான பதில்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் அந்த உரையில் எவ்வித விடயங்களும் இருக்கவில்லை. எனவே அவரின் உரை தொடர்பில் விவாதிக்க ஒதுக்கப்பட்ட நேரம் அதிகமானது என்று சுமந்திரன் குறிப்பிட்டார்
நாட்டில் இன்று பாரிய பொருளாதார பிரச்சினை உள்ளபோதும் அதற்கான தீர்வுகளையும் பதில்களையும் ஜனாதிபதி குறிப்பிடவில்லை.
இந்தநிலையில் தமது உரையில் அவர் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கூறவில்லை.
அத்துடன் அவருடைய உரையில் எவ்வித தகவல்களும் இல்லை என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் அவர் பேசியபோது நல்லிணக்கம் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் வடக்குகிழக்கு மக்களுக்கு வசதிகளை செய்து கொடுப்பதற்கான நல்லிணக்கம் என்று அவர் தமது உரையில் தெரிவித்திருந்தார்.
வடக்குகிழக்கில் இடம்பெற்ற போராட்டம், இறைமைக்கான, அரசியல் உரிமைக்காக, அதிகாரப்பரவலாக்களுக்கான போராட்டமாகும்.
எனினும் ஜனாதிபதி தமது உரையில் அந்த போராட்டத்தின் தன்மையை குறைத்து மதிப்பிட்டதாகவும் சுமந்திரன் குற்றம் சுமத்தினார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 7 மணி நேரம் முன்

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக நடிகை சமந்தா வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022