தமிழரசு கட்சி எம்பிக்கள் தொடர்பில் தேர்தல் பிரசார கூட்டங்களில் எழுந்துள்ள சர்ச்சை : சுமந்திரனின் விளக்கம்
இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அபிவிருத்தி நிதிகள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து நேரடியாக மாவட்ட செயலகங்களுக்கே அனுப்பப்படுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக பெரியளவிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இவ்வாறான சர்ச்சைகளுக்கு பதில் வழங்கும் முகமாக இன்றைய தினம் (28) நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர்,
"பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நிதி உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி நிதிகள் ஜனாதிபதி செயலகத்தால் இவ்வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.
அபிவிருத்தி நிதிகள்
இதற்கு உதவியாக அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் அபிவிருத்திக்காக முன்மொழிவுகள் கோரப்பட்டிருந்தன.

இக்கோரிக்கைகளின் அடிப்படையில் வெவ்வேறு தொகைகள் ஜனாதிபதி செயலகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இப்பணங்கள் மேற்சொன்ன அபிவிருத்தி பணிகளுக்காக நேரடியாக மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்படுகின்றதே தவிர எந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நேரடியாக கொடுக்கப்படவில்லை.
அண்மை காலங்களில் மேற்கொள்ளப்படுகின்ற தவறான விஷமப்பிரசாரங்கள் காரணமாகவே இவ்வறிக்கை வெளியிடப்படுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri