குகதாசனை ஒரு போதும் செயலாளராக அனுமதிக்க மாட்டேன்..! சுமந்திரன் அதிரடி
தான் தலைவராக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்க மாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்ததாக இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தர் திருமலை நவம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கட்சியின் உறுப்பினர்கள் இருவரிடம், குகதாசனுக்கு கட்சியின் பதவிகள் எதையும் நான் வழங்க மாட்டேன் என சுமந்திரன் சத்திய வாக்கு அளித்திருந்தார்.
அத்துடன் நாங்கள் உண்மைகளை தெளிவுப்படுத்துவதற்காகவே தமிழரசுக் கட்சியின் தலைவர் சிறீதரனை சந்தித்தோமே அன்றி அவரிடம் மன்னிப்பு கோரவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில்,
அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது!
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam