அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவை விமர்சித்துள்ள சுமந்திரன்
அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு கங்காரு நீதிமன்றத்தையும் விட மோசமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
இந்த ஆணைக்குழு எந்த கங்காரு நீதிமன்றத்தையும் விட மோசமானது. நீதித்துறையால் புறக்கணிக்கப்பட்ட ஒரு சிலரை அரசாங்கம் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமித்திருக்கிறது.
இந்த ஆணைக்குழு அரச ஊழியர்கள், அரசியல் வாதிகள், சம்பவத்துடன் தொடர்புடையவர்களிடம் வாக்குமூலங்களை பெறுவதற்கு அப்பால் ஏனையோரிடம் விசாரணைகளை நடத்துகிறது.
குறித்த ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், தன்மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு சட்டத்திற்கும், நீதிக்கும் அப்பால் சென்று செயற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.