காணாமல்போன கடற்றொழிலாளர்களை தேடும் பணி - இந்தியத் தூதரகத்துடன் அவசரத் தொடர்பு
பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளைச் சேர்ந்த நான்கு கடற்றொழிலாளர்கள் கடந்த 27ஆம் திகதி புதன்கிழமை கடலுக்கு சென்ற பின்னர் கரை திரும்பாததால், அவர்களை தேடும் நடவடிக்கையில் சக மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேற்று(29) பிற்பகல் பருத்தித்துறை முனை கடற்கரைக்கு சென்று தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்களிடம் நிலைமைகளை கேட்டறிந்தார்.
இரண்டாம் நாள் தேடும் பணி
தொடர்ந்து காங்கேசன்துறை கடற்படை கட்டளை அதிகாரியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தேடுதல் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்திய கடலோர காவற்படை மற்றும் இந்திய தூதரகத்தையும் தொடர்புகொண்டு காணாமல் போன கடற்றொழிலாளர்களை தேடுவதற்கு உதவி கோரினார்.

அதேவேளை, இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்தாவுடனும் தொடர்புகொண்டு ஹெலிகொப்டர் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை ஹெலிகொப்டர் மூலம் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து காணாமல் போன கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த சுமந்திரன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்தும் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan