இரட்டை வேடம் போடும் சுமந்திரன்! பேராசிரியர் கீத பொன்கலன் (Video)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ அல்லது சுமந்திரனுக்கோ நிலையான ஒரு அரசியல் நிலைப்பாடு இல்லை என அமெரிக்காவின் சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சுமந்திரனுக்கு நிரந்தரமான அரசியல் நிலைப்பாடு ஒன்று இல்லை. அவர்கள் நாளாந்தம் மாறக் கூடியவர்கள்.
சுமந்திரன் உள்ளிட்டோர் இப்போது ரணில் விக்ரமசிங்கவை விமர்சிக்கின்றார்கள். தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும் போது அவர்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கக் கூடும்.
தமிழ் மக்கள் தங்களுடைய நலன்களை கருத்திற் கொண்டு தங்களது வாக்குகளை அளிப்பதில்லை என்பது என்னுடைய நீண்டகால நிலைப்பாடு என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri
