யாழில் பெண்களால் மோசமாக தாக்கப்பட்ட இளைஞர்! - மனவிரக்தியில் தற்கொலை
யாழ்ப்பாணம் - நாவாந்துறை, கண்ணாபுரத்தில் புறா விவகாரம் தொடர்பில் இளைஞன் ஒருவரை இரு வாரங்களுக்கு முன்னர் பெண்கள் பலர் இணைந்து மிக மோசமான முறையில் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் மனமுடைந்திருந்த பாதிக்கப்பட்ட இளைஞன் 26ம் திகதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞரை தாக்கும் காட்சிகள் சமூக ஊடங்களில் வெளியிடப்பட்டதால் மனமுடைந்திருந்த பாதிக்கப்பட்ட இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
20 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், குறித்த இளைஞருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் தற்கொலை தொடர்பிலும் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri