காசாவில் தொடரும் அவலம்.. நடைமுறையில் உள்ள அர்த்தமற்ற போர்நிறுத்தம்!
கடந்த ஒக்டோபர் மாதம் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து குறைந்தது, 373 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 970 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 70,360 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 171,047 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
தொடர் தாக்குதல்கள்
போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள போதிலும், அத்தியாவசிய மருந்துகளில் 52 சதவீதமும், ஆய்வக நுகர்பொருட்களில் 70 சதவீதமும் கையிருப்பில் இல்லை என்றும் அது மேலும் கூறியது.

காசாவில் போர்நிறுத்தம் நடைமுறையில் இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், இஸ்ரேலிய அரசாங்கத்தின் காசா மீதான தாக்குதல்கள் தொடர்நது முன்னெடுக்கப்பட்டுதான் கொண்டிருக்கின்றது.
மேலும், போர்நிறுத்த அறிவிப்பிற்கு பின்னர், 373 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 970 பேர் காயமடைந்துள்ளமையானது நடைமுறையில் உள்ள போர்நிறுத்தம் ஒரு அர்த்தமற்றது எனவே சிந்திக்க வைக்கின்றது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri