ட்விட்டரில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
டுவிட்டரில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்வது தொடர்பாக புதிய விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டுவிட்டர் நிறுவனம் பயனாளர்களின் தனியுரிமையை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வுரும் நிலையில்,இந்த புதிய விதிமுறைகiள பிறப்பித்துள்ளது.
அதன்படி, டுவிட்டரில் தனி நபர்களின் புகைப்படம், வீடியோக்களை அவர்களின் அனுமதியின்றி பகிர தடை செய்யப்பட்டுள்ளது.
Sharing images is an important part of folks' experience on Twitter. People should have a choice in determining whether or not a photo is shared publicly. To that end we are expanding the scope of our Private Information Policy. 🧵
— Twitter Safety (@TwitterSafety) November 30, 2021
பொதுநபர்களாக இல்லாதவர்கள் தங்கள் அனுமதியின்றி புகைப்படம் பகிரப்பட்டிருப்பதாக புகார் அளித்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உடனடியாக அகற்றப்படும் என்றும் ஊடகங்கள் மற்றும் பொது நலனுக்காக பகிரப்படும் புகைப்படங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.