தரமற்ற ஊசி இறக்குமதி தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி இறக்குமதி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கீழ்மட்டத்தில் உள்ளவர்களை மாத்திரமே கைது செய்துள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம்சுமத்தியுள்ளன.
முன்னாள் அமைச்சர், சுகாதார செயலாளர் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரிகள் போன்ற முக்கிய பிரமுகர்களின் தொடர்பை இதுபோன்ற உயர்மட்ட குற்றச்சாட்டில் நிராகரிக்க முடியாது என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
எனவே, குற்றச்சாட்டில் தொடர்புடைய உயர்மட்டத்தினரும் கைது செய்யப்படவேண்டும். அத்துடன் இந்த ஊழலுக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்யுமாறும் சுகாதார சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
புதிய அமைச்சரின் கவனம்
இதேவேளை, சம்பவம் தொடர்பில் புதிய அமைச்சரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், அரச மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் உட்பட பல அதிகாரிகள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan