மட்டக்களப்பில் தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் தபால் நிலையத்தில் சமர்ப்பிப்பு
மட்டக்களப்பில் தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் தபால் நிலையத்திற்கு சமர்ப்பிப்பிக்கப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டு 11 மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் நேற்று(23.10.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.
தபால் மூலமாக வாக்கு விநியோகம்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இதன் பிரதானமான தபால் மூலமாக வாக்கு விநியோகம் புதன் கிழமையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலிருந்து இடம்பெற்றது.

மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14222 பேர் தபால் மூல வாக்குகளுக்காக விண்ணப்பித்திருந்தனர்.
எனினும் 14003 பேருடைய தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கான தபால் மூலமாக வாக்குகள் புதன்கிழமை தபால் நிலையத்திற்கு பாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டவுன் எதிர்வரும் இம்மாதம் மாதம் 30 ஆம் திகதி பொலிஸ்நிலையம், மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகத்திலும், அதுபோல் எதிர்வரும் 11 மாதம் முதலாம் மற்றும் நான்காம் திகதிகளிலும், ஏனைய அலுவலகங்களிலும், நான்காம் திகதி மேலதிகமாக பொலிஸ், மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகத்திலும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 21 மணி நேரம் முன்
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam