இலஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் 2 ஆயிரத்து 500 ரூபாய் இலஞ்சம் பெறும் போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை தெற்கு ஹோலிகுறுஸ் சுற்று வட்டப் பகுதியில் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் கலாவதியான காரணத்தினால், கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநரிடம் சந்தேக நபர் 5 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கோரியுள்ளார்.
இந்த நிலையில் அந்த பணத்தில் 2 ஆயிரத்து 500 ரூபாயை பொலிஸ் நிலையத்தில் வைத்து பெறும் போது உப பொலிஸ் பரிசோதகர், ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஓய்வுபெற இன்னும் இரண்டு மாதங்கள் மாத்திரமே இருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்பாக கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை! பகிரப்பட்டுள்ள வட்ஸ்அப் ஆதாரங்கள்
போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்கள்! சரணடைந்த தொழிலதிபர் - சம்மந்தப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டவர்
வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்குமாறு அவசர அறிவுறுத்தல்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம் Cineulagam