அநுர ஆட்சியிலும் மாற்றம் இல்லை எனக் கூறி மாணவர்கள் கிழக்கில் போராட்டம்
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் துண்டுப்பிரசுரம் வழங்கி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம், இன்று(30.04.2026) மட்டக்களப்பு காந்திபூங்காவில் இடம்பெற்றுள்ளதுடன், மாணவர்கள் ஒன்றுகூடிய அங்கிருந்து மட்டக்களப்பு நகருக்குள் துண்டுப்பிரசுரங்களை வழங்கியுள்ளனர்.
மாணவர்களின் கோரிக்கை
இதன்போது, கடந்த கால ஆட்சியாளர்களினால் தனியார் வைத்தியத்துறை பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்ட நிலையில், அதற்கான எதிர்ப்பினை மாணவர்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகிறார்கள்.

இந்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தேசிய மக்கள் சக்தி ஆட்சியாளர்கள் இன்று பாராமுகமாக இருந்து வருவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். “இலவசக்கல்வியை பாதுகாப்போம்” என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் போது இந்த விடயம் தொடர்பில் அப்பகுதி மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
“சிஸ்டம் சேஞ்” என்ற கோசத்துடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்திற்கும் கடந்தகால அரசாங்கத்திற்கும் இடையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல் நிலைகளினால் கல்வித்துறை, சுகாதாரத்துறை என்பனவற்றில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வைத்தியத்துறை பாரிய ஆபத்து நிலையினை எதிர்நோக்கும் நிலையேற்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த போராட்டத்தில்,கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் உட்பட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய நிர்வாகத்தினர், உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.


ரஜினி கமல் இணையும் படம்.. ஓடிடி வியாபாரம் இத்தனை கோடி தானா? அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் Cineulagam