பாடசாலை பொருட்களின் விலை உயர்வினால் மாணவர்கள் பெரும் பாதிப்பு: பெற்றோர் விசனம்
பாடசாலை பொருட்களின் விலை உயர்வினால் மாணவர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காகிதாதிகள், மாணவர்களின் பாதணிகள் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பினால் பெற்றோரினால் அவற்றை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பெற்றோர் தெரிவித்த கருத்துக்கள்
மாணவர்களின் ஒரு ஜோடி பாதணிகள் 1550 ரூபாவிலிருந்து 3780 ரூபாவாக உயர்வடைந்துள்ளது என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

குளியாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெற்றோர் ஒருவர் தமது இரண்டு பிள்ளைகளுக்குமான பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய 38000 ரூபா தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
10 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட பென்சில் இன்று 40 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இறப்பர் சிலிப்பர்கள் 200 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக மற்றுமொரு பெற்றோர் தெரிவித்துள்ளார். நாள் சம்பளத்திற்கு தொழில் புரியம் தமக்கு பாதணிகள் அல்ல சிலிப்பர்களைக் கூட கொள்வனவு செய்து கொடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை பொருட்கள் அதிகரிப்பு
பாடசாலை காகிதாகிகள் மற்றும் ஏனைய உபகரணங்களின் விலை அதிகரிப்பினால் அநேகமான பெற்றோர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைப்பதில் பெரும் சவால்களை எதிர் நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆய்வொன்றிற்காக தகவல்கள் திரட்டும் போதே பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளின் பெற்றோர் மற்றும் காகிதாதி கடைகளின் உரிமையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam