யாழில் பெற்றோரின் சித்திரவதையினால் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த பாடசாலை மாணவி (VIDEO)
யாழ். அச்சுவேலி பகுதியில் தாய், தந்தை தன்னை சித்திரவதை செய்கின்றனர் என சிறுமியொருவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
மதுபோதையில் வரும் தந்தை,தாயுடன் சண்டை பிடிப்பதாகவும் இருவராலும் தான் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை எனவும் தெரிவித்து 12 வயது சிறுமி ஒருவர் பாடசாலை சீருடையுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமியின் தந்தை மதுபோதையில் வந்து தாயாருடன் தினம் தோறும் சண்டை பிடிப்பதாகவும், இதனால் தன்னுடன் ஒவ்வொரு நாளும் வாக்குவாதத்திலும், சண்டையிலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்த சிறுமி, இன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய குறித்த சிறுமி நீண்ட நாட்களாக தந்தையின் சித்திரவதையைப் பொறுக்க முடியாது இன்றையதினம் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சிறுமியை கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் அச்சுவேலிப் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சிறுமி வீட்டின் மூத்த பிள்ளை எனவும், இவரை விட இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் பொலிஸாரின் முறைப்பாட்டின் போது தெரிவித்துள்ளார்.










தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri
