பயணக்கட்டுப்பாட்டில் நண்பர்களுடன் நீராடச்சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி
நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரி மாணவன் ஒருவர் கல்முனை கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதன்போது கல்முனை பகுதியை சேர்ந்த நேசமணி அக்ஸயன் (வயது 17) என்ற மாணவனே இன்று (8) மாலை கல்முனை கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயர்தரம் தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும் இவர் நண்பர்களுடன் கூட்டாக இணைந்து கடலில் குளித்து கொண்டிருந்த போதே சம்பவம் நடைபெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு கல்முனை மாநகர சபை உறுப்பினர் ச. ராஜன் மூலமாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.