பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள மாணவி நித்தியாவின் பூதவுடல் (PHOTOS)
பதுளை - ஹாலிஎல - உடுவர ஏழாம் கட்டைப்பகுதியில் 18 வயதுடைய மாணவி ஒருவர் நேற்று முன்தினம் தினம் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஹாலி எல பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற்றுவந்த மாணவி வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில், ஆயுதமொன்றில் தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மாணவியை கோடாரியால் வெட்டி கொலை செய்த 32 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
மேலும்,சந்தேகநபரின் காதலை நிராகரித்தமையே, இந்த கொலைக்கான காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
குறித்த மாணவியின் பூதவுடல் இன்று அன்னாரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உயிரிழந்த மாணவியின் மரணத்துக்கு நீதி கோரி அவர் கற்ற பாடசாலையான ஹாலிஎல வீதியில் ஊவா மாகாண ஆசிரியர் சங்கத்தால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்...
வெட்டிக்கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கொலை விவகாரம்! வெளியான புதிய தகவல்
கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சிறுமி! சந்தேகநபர் சிக்கினார்: புகைப்படத்தோடு வெளியான தகவல்










தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
