வவுனியாவில் கொடூரமாக தாக்கப்பட்ட மாணவன்: பொலிஸார் நடவடிக்கை
வவுனியாவில் பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனை கடுமையாக தாக்கி அதனை காணொளியாக பதிவுசெய்த சக மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் (18.05.2023) ஆம் திகதி பதிவாகியுள்ளது.
வவுனியா பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்குழு ஒன்று வவுனியா வைரவ புளியங்குளம் வீதியில் சக மாணவனை சரமாரியாக தாக்கி அதனை காணொளியாக பதிவு செய்து டிக்டொக் செயலியில் பதிவு செய்துள்ளனர்.
இருவர் கைது
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மாணவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
