மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான செயலமர்வு
" சிறுவர் பாதுகாப்பு தொடர்பான "மாணவத் தூதுவர் தேசிய வேலைத்திட்டம் தொடர்பான செயலமர்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (05) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியை வழங்கும் நோக்கில் திருகோணமலை மாவட்ட செயலகம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் கல்வி அமைச்சும் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களின் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சேவைகளைப் எவ்வாறு பெற்றுக்கொள்ளல், மாணவர் தலைவர்கள் தமக்கான தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக்கொள்ளும் விதம், பாடசாலைகளின் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் இதன் போது மாணவர்களின் மத்தியில் தெளிவூட்டப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் மு.மு.மு.ஸம்ஸீத், பொலிஸ் பிரதம பரிசோதகர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மாணவ தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |