யாழில் ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் மாணவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குறித்த பாடசாலை மாணவர்கள் சிலர் ஒரு மாணவனுடைய பேனாவை சுவரில் எறிந்துள்ளனர். பேனா உடைந்த நிலையில் இருந்ததால் சம்பந்தப்பட்ட மாணவர்களை பொறுப்பாசிரியர் ஒருவர் விசாரணை செய்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
இந்த நிலையில்,நடந்த சம்பவம் தொடர்பில் கூறுமாறு, ஆசிரியர், முறைப்பாட்டை செய்த மாணவரிடம் கேட்டுள்ளார். அந்த மாணவன் நடந்தவற்றை கூறிகொண்டிருக்கும் போதே, குறித்த மாணவனை தாக்கியுள்ளார்

சம்பவம் தொடர்பில் மாணவன் பெற்றோரிடம் முறையிட்ட நிலையில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மாணவனுக்கு காது பகுதி வலி காரணமாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோருடன் தொடர்பு கொண்டு வினவியபோது பாதிக்கப்பட்ட மகன் நேற்று (27) யாழ்ப்பாண வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பி உள்ளார்.
விசாரணைகள்
இந்நிலையில், ”மகனை தாக்கிய ஆசிரியர் இவ்வாறு பல மாணவர்களை பாடசாலையில் காட்டுமிராண்டித்தனமாக தாக்குவது வழமை என்றும் எனது பிள்ளை கீழே இருந்த பேனாவை எடுத்து சென்ற நிலையில் பேனா அவ்வாறு உன்னிடம் வந்தது என கேட்டு, குறித்த ஆண் ஆசிரியர் சீருடையை பிடித்து இழுத்து அவரின் கன்னப் பகுதியை தாக்கியதாக எனது மகன் தெரிவித்தார்” என பெற்றோர் குறிப்பிட்டுள்ளார்.

தனது பிள்ளைக்கு இடம்பெற்ற சம்பவம் போல் இனி சம்பவங்கள் எதுவும் இடம்பெறாமல் இருப்பதற்கு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, குறித்த ஆசிரியர் மீது பொலிசஸார் நடவடிக்கை எடுத்ததாக தான் அறியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், எமது ஊடகப்பிரிவு பொலி்ஸ் அதிகாரிகளிடம் அழைப்பினை மேற்கொண்ட போது இது தொடர்பில் விசாரணைகள் நடைபெறுவதாக தெரிவித்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam