வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பலத்த வாத பிரதிவாதம்
யாழ். வடமராட்சி, கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜீவன் ஜெயச்சந்திர மூர்த்தி தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டமானது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(16.06.2026) 9 மணியளவில் நடைப்பெற்றுள்ளது.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
இதன் போது பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் கருத்து தெரிவிக்கையில்,
பிரதேச அபிவிருத்தி கருதி எந்தவித பேதங்களும் இன்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இந்தக் கூட்டம் மக்களுக்காக கூட்டப்படுகின்றது. பிரதேசத்திலேயே நீண்ட கால பிரச்சனைகள் மற்றும் தற்காலிக பிரச்சனைகள் என பல பிரச்சனைகள் இருக்கின்றன.

இந்தப் பிரதேசத்தில் நிலம் சார்ந்த பிரச்சினைகள், சட்ட பிரச்சனைகள், குடிநீர் பிரச்சனைகள், வீட்டு பிரச்சனைகள் போக்குவரத்து பிரச்சனைகள், மின்சார பிரச்சனைகள் எனப் பல பிரச்சனைகள் இருக்கின்றன.
இவ்வாறான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே நாங்கள் இந்த கூட்டங்களை கூட்டுகின்றோம்.
மக்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளை முன்னிறுத்தியே கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.
நீர் விநியோகம்
இன்றைய கட்சியில் வேறுபாடுகள் எதுவும் இருக்கக் கூடாது. இது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்.
ஆகவே மக்களுடைய எந்தவிதமான பிரச்சனைகள் என்றாலும் முன் வையுங்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கே இருக்கின்றார்கள். நாங்கள் அதற்கு தீர்வை காண்போம்.
அதே போன்று தான் ஊடகங்களும் தமது கடமைகளை சரியாக செய்ய வேண்டும். ஊகத்தின் அடிப்படையிலோ அல்லது பிரச்சனைகளை கிளப்பி விடுகின்ற அடிப்படையிலோ செய்திகளை வெளியிடக்கூடாது. உரியவர்களை தொடர்பு கொண்டு உண்மையான செய்திகளை வெளியிட வேண்டும்.

இதேவேளை, வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் நீர் விநியோகத்தை பெறுபவர்களுக்கு 35 வீத சலுகையில் நீர் விநியோக நட்புகளை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு ஏற்படுகின்ற எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி அனைவரும் ஒன்றாக இணைந்து அதற்காக கேள்வி எழுப்ப வேண்டும்.
வடமராட்சிக் கிழக்கில் 650 க்கு மேற்பட்டவர்களுக்கு குடியிருப்பு காணிகள் இல்லை, வடமராட்சி கிழக்கில் இன்னமும் வீடுகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.
வீட்டுத் திட்டங்கள்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சஜித் பிரேமதாசா காலத்தில் வழங்கப்பட்ட வீட்டு திட்டங்களுக்கு புதிய பணம் வழங்கப்படாது வீடுகள் முழுமைப்படுத்தப்படாமல் காணப்படுகின்றன.
அவர்களுக்குரிய நிதிகளை வழங்கி அந்த வீடுகளையும் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இவருடைய கருத்திற்கு பதில் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரன் மூர்த்தி,

இது கடந்த அரசாங்கம் செய்த வேலை என்றும் அதற்காக நிதி வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவ்வாறான ஒரு செயற்பாடு நடைபெறுவது தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தே வேளை, அங்கு கருத்து தெரிவித்த பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் எந்த அரசாங்கம் ஆட்சி செய்தாலும் தொடர்ந்து வருகின்ற அரசாங்கங்கள் தான் பொறுப்புச் சொல்ல வேண்டும். என்றும் தனது கருத்தை முன் வைத்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர் உரிய கவனம் எடுத்து, உரிய அமைச்சுக்களுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
பேருந்து சேவை
இதனைத் தொடர்ந்து, பருத்தித்துறையிலிருந்து கோவில் வரையும், கோவிலிலிருந்து பருத்தித்துறை செல்கின்ற அரச பேருந்துகளின் காலை மற்றும் மாலை சேவைகள், மருதங்கணியிலிருந்து வத்திராயன், உடுத்துறை ஆழியவளை ஊடக கெவிலிர்க்கும், கெவிலிலிருந்து பருத்தித்துறை செல்கின்ற பேருந்துகள் ஆழியவளை, உடுத்துறை, வத்திராயான் ஊடக மருதங்கேணி குடியிருப்பு வீதியால் மக்கள் நலன் கருதி செல்வதாகவும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த வீதி பிரதேச சபைக்கு சொந்தமானது என்றும் சபையுடன் புதிய அனுமதிகள் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் இது பொது போக்குவரத்துக்கு பொருத்தமான வீதி அல்ல என்றும் இதனால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்ததுடன் சபை அனுமதி வழங்காது என்றும் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்கு கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர்,
இது மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. இதற்கு பிரதேச சபையும் மக்களின் நலன் கருதி அந்த வீதியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை மேம்பாடு
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவிக்கும் போது,
மக்களுக்காக தான் சபைகள் இயங்க வேண்டுமே ஒழிய மக்களின் நலன்களுக்கு எதிராக இயங்க முடியாது என்று தெரிவித்ததுடன், உரியவர்கள் குறித்த வீதியை பயன்படுத்த பிரதேச சபையிடம் எழுத்துமூலம் விண்ணப்பிக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்களுக்கும், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளருக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து, எதிர் வரும் வாரம் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான கூட்டம் ஒன்றிற்காக திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தாழையடி பகுதியிலும், மணல்காடு பகுதியிலும் சுற்றுலாத்துறை மேம்பாடு கருதி தனியார்களுக்கு பல நூறேக்கர் காணிகள் வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்ட வேளை வடமராட்சி கிழக்கில் 650 குடும்பங்களுக்கு குடியிருக்க காணி இல்லை என கூறப்பட்டுள்ளது.
மேலும், அவர்களுக்கு காணி வழங்காது இவ்வாறு தனியார்களுக்கு காணி வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணி வழங்கும் நடவடிக்கை
வடமராட்சி வடக்கு, வடமராட்சி தெற்கு, மேற்கு, மற்றும் வடமராட்சி கிழக்கு ஆகிய பிரதேசங்களில் பல ஆயிரம் குடும்பங்கள் காணியில்லாத நிலையில் வசித்து வருவதாகவும் இதனால் அரச காணி உள்ள பிரதேசமாக காணப்படுகின்ற வடமராட்சி கிழக்கு பிரதேசத்தை அந்த மக்களுக்கு காணி வழங்குவதற்குரிய காணி வங்கியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் 52 வீதமான காணிகள் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவர்கள் இதற்குரிய அனுமதியை வழங்காததனால் காணி இல்லாத மக்களுக்கு தங்களால் காணி வழங்க நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

என்னிடம் இது தொடர்பாக வன ஜீவ ராசிகள் திணைக்களத்திடம் கேள்வி கேட்பதற்கு முற்பட்டபோது அங்கு அவர்கள் பிரசன்னமாகி இருக்கவில்லை.
இங்கு கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர் முதலில் மக்களுக்கு காணி வழங்குவதற்குரிய நடவடிக்கையை எடுக்குமாறு பிரதேச செயலாளருக்கு கோரிக்கை விடுத்ததுடன் அபிவிருத்தி நடவடிக்கையாக சுற்றுலாத்துறை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிலைக்கேணி கடற்படையினர் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுவதாக கூறி கடற்றொழிலாளர்களை தாக்குவதாகவும், சட்ட விரோத கடற்றொழில் இடம்பெற்றால் கடற்படை அவர்களை கைது செய்ய முடியும்.
கடற்றொழில் நடவடிக்கைகள்
ஆனால் அவர்கள் மீது தாக்குதல் நடத்த முடியாது என்றும், கடற்படை தாக்கிய விடயத்தை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்றபோது பொலிசார் முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்திருந்தாலும் இந்தக் குற்றச்சாட்டுக்களை கடற்படை, போலிஸார் மறுத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நீதியியல் வளத்துறை உதவி பணிப்பாளர்,
கரையோரமாக வீதி காணப்படுவதனால் தான் வடமராட்சி கிழக்கில் அதிகளவான சட்டவித கடற்றொழில்கள் இடம் பெற்று வருவதாக தெரிவித்ததுடன் பலர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் பல திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக அதிகாரிகள், பயிற்சித்துறை பிரதேச சபை தவிசாளர், அரச நிறுவனங்களின் தலைவர்கள், சமூக மட்ட அமைப்புகளின் தலைவர்கள், கடற் படை இராணுவம் மற்றும் காவல்துறை என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri