அநுராதபுரம் போதனா வைத்தியசாலை விவகாரம்! வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள வைத்தியர்கள்

Anuradhapura Jaffna Nuwara Eliya Strike Sri Lanka
By Thiva Mar 12, 2025 06:37 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய சங்க அதிகாரிகள் இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கு வலுசேர்க்கும் முகமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்தியசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் 

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை அரச மருத்து அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் புதிய அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் புதிய அறிவிப்பு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை விவகாரம்! வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள வைத்தியர்கள் | Strike At Nuwaraeliya Hospital

இதன் காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை நடவடிக்கைகள் சற்று ஸ்தம்பிதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த வேலைநிறுத்தம் காரணமாக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். எவ்வாறாயினும் விபத்து, அவசர சிகிச்சை, மகப்பேறு என்பன வழமை போல் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

கிளிநொச்சி 

மேலும், அனுராதபுரம் வைத்தியர் பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து நாடுபூராகவும் வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை விவகாரம்! வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள வைத்தியர்கள் | Strike At Nuwaraeliya Hospital

இதன் காரணமாக சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் பெரும் அசோகரியங்களுக்கு உள்ளானதுடன் சிகிச்சை பெற முடியாத நிலையில் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பல மயில் தூரத்தில் இருந்துதனியார் பேருந்துகளில்வருகை தந்தம்நோயாளர்கள் பெரும் பண நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

செய்தி - தேவந்தன்

முல்லைத்தீவு 

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று(12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை விவகாரம்! வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள வைத்தியர்கள் | Strike At Nuwaraeliya Hospital

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரினால் பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வைத்தியர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 32 வயதுடைய பெண் வைத்தியர் நேற்று (10) தனது கடமைகள் நிறைவடைந்ததையடுத்து வைத்தியர்களுக்காக வழங்கப்பட்ட தங்குமிடத்திற்கு சென்றுள்ளார்.

பின்னர் இரவு வேளையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்குமிடத்திற்கு சென்று அவரை பாலியல் அத்துமீறல் செய்ததாகக் கூறப்படுகின்றது.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை விவகாரம்! வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள வைத்தியர்கள் | Strike At Nuwaraeliya Hospital

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை விவகாரம்! வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள வைத்தியர்கள் | Strike At Nuwaraeliya Hospital

செய்தி - ஷான்

யாழ் போதனா வைத்தியசாலை

அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 8:00 மணி முதல் 24 மணி நேர நாடு தழுவிய அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் என்பன முன்னெடுத்துவருகிறது.

அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர ஈடுபட்டுள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர வைத்திய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருந்தன.

இதனால் சேவையினை பெறவந்த நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை விவகாரம்! வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள வைத்தியர்கள் | Strike At Nuwaraeliya Hospital

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை விவகாரம்! வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள வைத்தியர்கள் | Strike At Nuwaraeliya Hospital

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை விவகாரம்! வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள வைத்தியர்கள் | Strike At Nuwaraeliya Hospital

செய்தி - தீபன்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணியாற்றிய பெண் வைத்தியரைக் கத்திமுனையில் பாலியல் அத்துமீறல் செய்த குற்றவாளியை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி கிண்ணியாவிலும் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை (12) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

கிண்ணியா தள வைத்தியசாலை, காக்காமுனை ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம், நடுவூற்று பிரதேச வைத்தியசாலை ஆகியவற்றில், நோயாளர்களுக்கான வைத்திய சேவைகள் இன்று இடம் பெறவில்லை எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை விவகாரம்! வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள வைத்தியர்கள் | Strike At Nuwaraeliya Hospital

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை விவகாரம்! வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள வைத்தியர்கள் | Strike At Nuwaraeliya Hospital

செய்தி - கியாஸ்

வவுனியா 

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை விவகாரம்! வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள வைத்தியர்கள் | Strike At Nuwaraeliya Hospital

கடந்த திங்கள் கிழமை (10) அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் தவறான முறைக்குட்படுத்திய சம்பவம் பதிவாகியிருந்தது.

இதற்கு நீதிகோரி நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (12.03) காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

செய்தி - திலிபன்

மருதங்கேணி 

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் தவறான முறைக்குட்படுத்திய சம்பவத்தால் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வைத்தியர் தவறான முறைக்குட்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை மற்றும் நித்தியவெட்டை ஆரம்பபிரிவு வைத்தியசாலை வைத்தியர்களும் இன்றையதினம்(12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US