அரசாங்க தரப்பில் கடுமையாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் - அர்ஜூன டி சில்வா
நாட்டில் தற்போது காணப்படும் நிலைமையானது மோசமாக இருப்பதாகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதா என்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் சிரேஷ்ட மருத்துவத்துறை பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியதன் காரணமாகவே கோவிட் முதலாவது அலையை சிறப்பாக கட்டுப்படுத்த முடிந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மருத்துவத்துறை பேராசிரியர் அர்ஜூன டி சில்வா, காணப்படும் நிலைமை சரியில்லை. இதனால், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நோக்கி செல்ல வேண்டுமா என்ற கேள்வி இருக்கின்றது.
அரசாங்க தரப்பில் கடுமையாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமா என்பது குறித்து அரசாங்கம் ஆராய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
