இலங்கை உட்பட்ட நாடுகளுக்கு கடும் குடியிருப்பு நிபந்தனை அறிவித்துள்ள நாடு
லிதுவேனியாவின் (Lithuania) வெளிவிவகார அமைச்சகம் குடியிருப்பு அனுமதி விண்ணப்பங்களுக்கான புதிய விதிமுறைகளை 2024 டிசம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
இலங்கையில் உள்ள லிதுவேனியாவின் துணைத் தூதரகம் இதனை அறிவித்துள்ளது.
இதற்கமைய, லிதுவேனியா விசா சேவை வழங்குநர்கள் மூலம் குடியிருப்பு அனுமதி விண்ணப்பங்களுக்கு கடுமையான நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் விசா சேவை
இதன்படி, தகுதியான குடும்ப மீள் இணைவு, மருத்துவம் உட்பட்ட கல்வித் திட்டங்கள் மற்றும் கற்கைகள், அதிக திறன் வாய்ந்த வேலைவாய்ப்பு மற்றும் குறிப்பிட்ட முதலீடுகளுக்கு மாத்திரமே குடியிருப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இருப்பினும், பருவகால வேலைளுக்கான விண்ணப்பங்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இலங்கையில் உள்ள உள்ளூர் விசா சேவை அலுவலகங்கள் மூடப்படுவதால், விண்ணப்பதாரர்கள் அண்டை நாடுகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்றும் லிதுவேனியாவின் துணைத் தூதரகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
