கொழும்பில் கடுமையாகும் சட்டம் - பொது மக்களுக்கு எச்சரிக்கை
கொழும்பு நகரத்தில் முகம் கவசம் அணியாமல் பயணிப்போர் மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக செயற்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தற்போது சிலர் முகக் கவசம் அணியாமல் பயணிப்பதாக பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபாதை கடைகள், கோட்டை ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இது தொடர்பில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.