தீவிரமடையும் சியாரன் புயல்: பிரித்தானியா முழுவதும் மூடப்பட்ட 300ற்கும் மேற்பட்ட பாடசாலைகள்
பிரித்தானியாவை தற்போது தாக்கி வருகின்ற சியாரன் புயல் காரணமாக அந்நாடு முழுவதும், 300க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 104 மைல் வேகத்தில் காற்றும், கனமழையையும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக வெளியான தகவலை அடுத்து பிரித்தானியா முழுவதும் இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையின் சில பகுதிகளில் இரண்டாவது மிக உயர்ந்த எச்சரிக்கையான “இரண்டு அம்பர் எச்சரிக்கை” விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு நிலைய தகவல்
அத்துடன் குறிப்பிட்ட சில பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கையும் நடைமுறையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தெற்கு இங்கிலாந்து மற்றும் சேனல் தீவுகளில் உள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள் சிறுவர்களின் பாதுகாப்பு கருதி இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வானிலை ஆய்வு நிலைய அதிகாரிகள் “மணிக்கு 70 மைல் முதல் 80 மைல் வேகத்திலோ அல்லது மணிக்கு 85 மைல் வேகத்தில் புயல் கரையைக் கடக்கக் கூடும்” என குறிப்பிட்டுள்ளனர்.

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam
